தஞ்சாவூர் ஜூன் 18.
டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள் கொண்டு வருவோம் என்றார் தமிழக தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா
தஞ்சாவூரில் இந்தியா கூட்டணி செயல்வீரர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்த கூட்டணி தொடர்ந்து எட்டாவது வெற்றியை பெற்றுள்ள து,அடுத்து விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் ஒன்பதாவது வெற்றியும் பின்னர் 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் பத்தாவது வெற்றியும் இக்கூட்டணி பெறும்.
தமிழக முதல்வர் தஞ்சாவூருக்கு சிப்காட் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதேபோல விவசாய ம் சார்ந்த தொழில் பேட்டைகளை யும், இப்பகுதிக்கு கொண்டு வரு வோம் ,திருவாரூரிலும் தொழிற் பேட்டைக்கான இடம் தேர்வு நடை பெறுகிறது.
டெல்டா மாவட்டங்களில் விவசாய பூமியை காப்போம், அதே நேரத்தில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவதற்கான பணிகளையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார் என்றார். ராஜா
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசினார்,முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணி க்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பிஜி ராஜேந்திரன் டி.ஆர் லோகநாதன் எஸ் எம் பி துரைவேலன், திராவிட கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார் மதிமுக தெற்கு மாவட்ட செயலர் தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் சின்னை. பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாவட்ட செயலர் முத்து உத்திராபதி, விடுதலை சிறுத்தை கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இந்தியாகூட்டணி செயல் வீரர் கள் கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி ஆர் பி ராஜாவுக்கு வீரவாள் வழங்கிய திமுக நிர்வாகிகள்.



