நாகர்கோவில் ஜன 26
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர். இரா. ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரின் அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெண்கள் அதிக அளவில் கூடும் பேருந்து நிலையங்களில் அதிரடிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகரில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருவதால் பேருந்து நிலையத்தில் அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் குற்ற சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளது. எனவே தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் அப்பொழுதுதான் சமூக விரோத செயல்களில் ஈடுபட நினைப்பவர்கள் அச்சப்படுவார்கள். பொதுமக்களும் நிம்மதியாக இருக்க முடியும் என தெரிவித்து காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைக்கு தங்களுடைய பாராட்டை தெரிவித்தனர்.