மார்ச்: 18
காங்கேயம் ரோடு CTC பகுதி மற்றும் பெரிய கடை வீதிஃ நொய்யல் வீதி பகுதியில் ரோட்டோர நடைபாதைகளை ஆக்கிரமித்து செயல்பட்டு வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி. 50 க்கு மேற்பட்டோர்
மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகரத்திற்குட்பட்ட பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து CTC வழியாக காங்கேயம் ரோட்டில் குறுகிய சாலைகளாக இருந்ததால் மாநகராட்சி நிர்வாகம் காங்கேயம் ரோடு சாலை பகுதிகளில் உள்ள நெருக்கடியாக இருந்த கடைகளை அப்புறப்படுத்தி பல கோடி ரூபாய் அளவில்
கடை வைத்துள்ளவர்
களுக்கு கொடுத்தும் சாலையை அகலப்படுத்தி பாதசாரிகள் நடந்து செல்லும் விதமாக நடைபாதையும் அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் பாதசாரிகள் நடைபாதையாக உபயோகப்படுத்தும் பகுதிகளை அந்தப் பகுதியில் கடை வைத்திருக்கும் கொங்குநாடு மீன் கடை, மூசா மீன் கடை, அத்தா பிரியாணி கடை, அலி பிரியாணி, பாபு பிரியாணி, ஹாஜியார் பிரியாணி,சமீமா கோழி கடை, நண்பன் மீனவன், சிஜிஎஸ் கம்ப்யூட்டர் எஜுகேஷன்/ ஸ்வீட் கடைகள், நிலா மீன் கடை மற்றும் பல பேர் அத்து மீறி தங்களது கடையின் பிளக்ஸ் போர்டுகளையும், கடையின் அடுப்பு மற்றும்பிற பொருட்களை எல்லாம் அந்த பகுதியிலேயே வைத்து ஆக்கிரமித்து உள்ளார்கள். இதன் காரணமாக பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வழியில்லாமல் சாலையில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன விபத்துக்கள் அதிகம் நடைபெற்று வருகிறது.
பல கோடி ரூபாய் இடத்தின் உரிமையாளர்களுக்கு கொடுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து செயல்படும் கடைகளின் மீது அபராதம் விதிக்க கோரியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் இந்திய தேசிய லீக் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.



