தூத்துக்குடி மாநகராட்சியில் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு;-
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியின் மத்திய அலுவலகத்தில் ஊழலை ஒழிப்பதற்கு என்றும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.