கிருஷ்ணகிரி .அக் 18
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹஸ்ரத் முஹம்மத் சுலைமான் ஷாகாதிரி தர்காவில் ஆண்டுத் தோறும் நடத்தப்படும் உரூஸ் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி இரண்டு நாள்கள் நடைப்பெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த கொடிமரத்தில் வாசன திரவிங்கள் தெளிக்கப்பட்டு சிறப்பு தொழுகையுடன் கொடி ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கர்நாடகாவை சேர்ந்த நாவஸ் தாஜ் சிஷ்தி, மற்றும் ஆரிப் மன்கா ரிஃபாபி ஆகியவரின் கவ்வாலி இசைப்பாடலுடன் சந்தன கூடு திருவிழா நடைப்பெற்றது. இந்த உருஸ் திருவிழாவில் ஜெகதேவி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர். விழாவினைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இத்த விழாவிற்கான ஏற்பாடுகளை சேக் முஹமத் அஸ்லாம் ஷா காதிரி, முஹம்மத் ரஸ்விபாஷா காதிரி, முஹம்மத் ஷானவாஸ் காதிரி, முஹம்மத் கவுஸ் காதிரி, ஷாஹுல் ஹமீத் காதிரி மற்றும் சீடர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.