டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட திட்டம் என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் பேட்டி
தஞ்சாவூர். மார்ச் 21.
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராடுவதற்கு திட்டமிட்டு வருகிறோம் என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் பேட்டியளித்தார்
தஞ்சை விளார் சாலையில் வி.கே. சசிகலா கணவர் ம. நடராசன் நினைவிடத்தில் அவரது 7வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு அவரது சமாதியில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களுடன் ஓ. பன்னீர் செல்வம் இணைந்து செயல் படுவது வித்தியாசம் இல்லை. அனைவரும் ஜெயலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர் கள்தான் .என்றார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 40 ஆயிரம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தமிழக அரசு ஏமாற்றியுள்ளது. இந்த ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர் களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும் என கேள்வி எழுப்பினார்
இந்தப் பிரச்னையில் பாஜகவுடன் கூட்டணி கட்சிகளும் கலந்து பேசி இணைந்து போராடவுள்ளோம். இந்த விவகாரத்தில் மாபெரும் ஊழல் வெளிப்பட போகிறது. இதில் ஆட்சியாளர்கள் சிக்கவுள்ளனர் என்றார்.
தமிழ்நாட்டின் ஜீவாதாரத்தை பாதிக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைக் கட்டுவதற்கு காரணமான கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமா ரை சோனியா காந்தியுடன் எடுத்துக் கூறி தடுப்பதற்கான முயற்சியைத் தமிழக முதல்வர் மேற்கொள்ளவில்லை. மாறாக அவரது செயலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து ள்ளார்.
ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்குத் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட தொண்டர் கள் முன் வர வேண்டும். இதில் யார் தலைவர் என கௌரவம் பார்ப்பது சரியாக இருக்காது. திமுகவை வீழ்த்த மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து தொண்டர்களும் தகுதியான நபரை தலைவராகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும் என்றார் தினகரன்.