குளச்சல் ஜூன் 26
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சம்நாத் 35 வயதான இவர் குளச்சலில் இருந்து திங்கள் சந்தை செல்லும் மினி பேருந்தில் ஓட்டுனராக பணி செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இவர் தனது மனைவியின் சகோதரியுடன் கள்ளத்தொடர்பில் இருந்திருக்கிறார். மேலும் தனது கள்ளக்காதலியை தனி வீட்டில் குடி வைத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.இவருக்கு 10 வயதில் மகள் ஒருவர் இருந்திருக்கிறார். தனது காதலி வீட்டில் இல்லாத போது அவரது 10 வயது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். இதற்கு அந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.
தனக்கு நடக்கும் கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாத சிறுமி பக்கத்து தெருவில் உள்ள பாட்டியிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறிய அழுது இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பாட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகமது சம்நாத்துக்கு எதிராக புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் மது அருந்திய முகமது சம்நாத் சிறுமியின் பாட்டி வீட்டிற்கு சென்று அந்த சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். இதற்கு சிறுமி மறுக்கவே அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து கடுமையாகத் தாக்கி சிறுமியை மீட்டுள்ளனர். காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது சம்நாத்தை காவல்துறையினர் கைது செய்து மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.