ஊத்தங்கரையில் அமைந்துள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய விலையில்லா பொருட்களின் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கே வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களுக்கான புகார் பெட்டியைத் திறந்து ஆசிரியர்களால் கொடுக்கப்பட்டிருந்த மனுக்களை வாசித்து, கோரிக்கைகளின் தற்போதைய நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அருகில் உள்ள நூற்றாண்டு கண்ட தொடக்கப்பள்ளியிலும் விரிவான ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடம் தமிழ் எழுத்துகள், ஆங்கில எழுத்துகளை கூறச்சொல்லி கேட்ட அமைச்சர், அவர்களின் எழுத்தறிவையும் ஆய்வு செய்தார். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு செய்ததால், வட்டாரக் கல்வி அலுவலர்களும், ஆசிரியர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்தார்கள்.



