பூதப்பாண்டி – நவம்பர் – 10-
பூதப்பாண்டியை அடுத்துள்ள கேசவன் புதுர்மேல புதூர் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சதீஸ்குமார் (41) இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தற்போது கோவில் காவலர் பணி புரிந்து வருகிறார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர் வசிக்கும் தெருவில் அதே பகுதியை சேர்ந்த சஞ்சை, டொனால்டு, பிரபு மற்றும் கன்டால் தெரியும் நபர் உள்பட நான்கு பேர் தெருவில் தகாத வார்த்தைகள் பேசி சத்தம் போட்டு கொண்டு இருந்தனர்கள் அதை விலக்கி விட்டதில் இவர்களுக்குள்ளே முன்பாக இருந்து வந்தது இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.00 மணியளவில் சதீஸ்மோகன் தெருவில் நடந்து போகும் போது சஞ்சை, டொனால்டு, பிரபு மற்றும் கன்டால் தெரியும் நபர் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அவரை வழிமறித்து தகாத வார்த்தையால் பேசி கல்லால் மற்றும் கம்பால் தாக்கியும், கத்தியால் குத்தியும் உள்ளார்கள்படுகாயம் அடைந்த சதீஸ் மோகன் சிகிச்சைக்காக நாகர்கோவிலிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து அவர் பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் நான்கு பேரின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.


