ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
ஆரல்வாய்மொழி. டிச,25: ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
ஆரல்வாய்மொழி அழகியநகர் பகுதியை சார்ந்த வீரசிங்கம் என்பவர் மகன் ராம்கி 26 இவர் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பாக செண்பகராமன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆச்சம்புதூர் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் நூல் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார் இதே கம்பெனியில் செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் பகுதியை சார்ந்த ராஜ்குமார் என்பவர் மகள் ஆஷா 23 என்பவரும் பணிபுரிந்து வந்தார் இந்நிலையில் ராம்கி என்பவருக்கும் ஆஷாவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது இதனால் 4 ஆண்டு காலமாக காதலித்து வந்த அவர்கள் தற்போது அந்த கம்பெனியில் வேலை பார்க்காத நிலையில் ஆஷாவின் வீட்டில் இவர்களின் காதல் பற்றி விவரம் தெரியவும் ஆஷாவை வெளியே அனுப்பாமல் வீட்டில் வைத்திருந்தனர் இதனால் ராம்கி யும் ஆஷாவும் வீட்டை விட்டு வெளியேறி
கடந்த 24 ஆம் தேதி குலசேகரப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர் இதனிடையே ஆஷாவின் பெற்றோர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஆஷாவை காணவில்லை என புகார் கொடுத்திருந்த நிலையில் தகவல் அறிந்ததும் திருமணமான காதல் ஜோடிகள் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு வந்தனர். ஆஷா ராம்கி உடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த காரணத்தினால் ஆஷாவை ராம்கியுடன் அனுப்பி வைத்தனர்



