கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சந்தூர், வெப்பாலம்பட்டி, பட்டகப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 93 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் செல்வா என்ற தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளியின் கட்டிடம் 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட ஓட்டுக்கட்டிடத்தில் 2ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை இயங்கி வருகிறது. இக்கட்டிடத்தில் ஓடுகளை தேசமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. ஆங்காங்கே ஓடுகள் பெயர்ந்து ஓட்டையாக காணப்படுகிறது. எந்நேரத்திலும் மாணவர்கள் தலையில் விழுக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதேபோல் பள்ளியை சுற்றி
விஷ ஜந்துக்கள் தங்கும் அளவுக்கு
முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. பாம்பு பூராண் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் எந்நேரத்திலும் ஜன்னல் வழியே பள்ளி வகுப்பறைக்குள் நுழையக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. பழுதாகியுள்ள ஓட்டுகளை நீக்கியும், பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்திக் கொடுக்கவும் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வா அவர்களிடம் கேட்டபோது, 1956ல் கட்டப்பட்ட கட்டிடமாக இருந்த போதும் நல்ல தரமான நிலையில் கட்டிடத்தின் சுவர் உள்ளது. மேற்கூரையில் ஆங்காங்கே ஓடுகள் பெயர்ந்து உடைந்துள்ளனர். அவற்றை எடுத்துவிட்டு புதுப்பித்து தர ஊள்ளூரில் உள்ள சில சமூக ஆர்வலரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர்கள் பரிசீலித்தால் உடனடியாக மேற்கூரை மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதுகுறித்து பர்கூர் வட்டார கல்வி அலுவலர் முருகன் அவர்களிடம் கேட்டபோது, இரண்டு ஆண்டுகளாக கட்டிடத்தை புதுப்பித்து தர மனு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆணை பிறப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பள்ளியை சுற்றி தூய்மை செய்தாலும் உள்ளூர் இளைஞர்கள் இரவு நேரங்களில் புகுந்து பள்ளி வளாகத்தை சேதப்படுத்துவதாக தெரிவித்தார். இருப்பினும் துய்மைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.