நாகர்கோவில் அக் 27
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது உடன் இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட தலைவர் பைரோஸ் காஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.
இன்றைய கால சூழ்நிலை சமூகத்தின் அனைத்து மக்களையும் ஒருங்கிணைந்து சமூகப் பணி செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை துரிதப்படுத்தி சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர்கள் ஏ.ஆர்.சாகுல் ஹமீது, பிஜூருல் ஹபீஸ், மண்ணிவாக்கம் யூசுப், மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அமீர்கான், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநில துணைச்செயலாளர் மிஸ்பா, தகவல் தொழில்நுட்ப மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட துணைச் செயலாளர் அஷ்ரப் அலி, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபுதாஹிர், வணிகர் சங்க அணி மாவட்ட செயலாளர் முகமது சம்மில், நாகர்கோவில் மாநகர துணைச் செயலாளர் இடலை. சாகுல், லத்தீப், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்..