புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி போட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்
ஓட்டபிடாரத்தில் நடு மாட்டு வண்டி போட்டி,சின்ன மாட்டு வண்டி ,பூஞ்சிட்டு மாட்டு வண்டி என மூன்று பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் நடு மாட்டு வண்டி போட்டியில் 11மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி போட்டியில்24 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 38 மாட்டு வண்டிகளும், கலந்து கொண்டன. ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளருமான மோகன் தலைமையில் மாட்டு வண்டி பந்தயத்தை தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கழக அமைப்புச்செயலாளர் சுதா.கே பரமசிவன்,விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவஹர்,கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமணப் பெருமாள்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாண்டி கோபி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் தினேஷ் குமார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டணர்.