மார்த்தாண்டம், பிப்- 27
மார்த்தாண்டம் அருகே பாகோடு நெல்லிபறம்புவிளையை சார்ந்தவர் சார்லஸ் (58). விவசாயி. இவர் கிட்னி மற்றும் ஹார்ட் உட்பட ஏராளமான பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை ஞாறான்விளை பாலம் அருகாமையில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் .இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.