மதுரை. மே 26
தேனி மாவட்டம், மேகமலையில், பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் மரம் சாய்ந்தது இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேகமலையில் காலை முதல் மழை பெய்தது.
பலத்த மழையுடன் காற்று வீசியதால், மேகமலைக்கு செல்லும் மலைப்பாதையில் மரம் சாய்ந்தது பலமணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. நேற்று
ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை முதலே வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வேன்கள், கார்கள் இரு சக்கர வாகனத்தில் மேகமலைக்கு பயணித்தனர்.
வழியில் மரம் சாய்ந்ததால், பயணிகள் சாலை சீர் அடையும் வரை காத்திருந்தனர். இதனால் வனத்துறையினர்
செக் போஸ்டரில் காலையில் வந்த பயணிகளை மாலை 5..மணிக்குள் திரும்ப வேண்டும் என்றும், மழையாக இருப்பதால், கவனமாக செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் ஆலோசனை வழங்கினர்.
இதில் மதுரையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அங்கு சுமார் 3..மணி நேரத்துக்கு மேலாக சாலையில் காத்திருந்ததாக, தெரிவித்தனர்.