ஈரோடு டிச 12
மதுரை மேலூர் பகுதியை சேர்ந்தவர் திருமலை செல்வன் வயது 35. தொழிலாளி இவர் ஈரோடு மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த சுகன்யா என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒமிஷா (7) என்ற மகளும், நிகில் (4) என்றமகனும் உள்ளனர்
இவர்கள் குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்தனர். திருமலைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
மேலும் சுகன்யாவின் நடத்தையில் திருமலைசெல்வன் சந்தேகப்பட்டார் இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுகன்யா கோபித்து கொண்டு
தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து விட்டார்.
இந்த நிலையில் திருமலைசெல்வன் மனைவி மற்றும் குழந்தை களை பார்க்க ஈரோடு வந் தார் . அப்போது இனி மது குடிக்க மாட்டேன் என்று கூறி சுகன்யாவை குடும்பம் நடத்த அழைத்தார்.
இதனால் சமா தானம் அடைந்த சுகன்யா தனது கணவனுடன் மதுரை சென்றார். அங்கு மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது இதனால் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து விட்டார். அப்போது அங்கு வந்த திருமலை செல்வனுக்கும்
சுகன்யாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென்று
திருமலைசெல் வன் பெட்ரோலை தனது மனைவி மற்றும் மகன் மகள் மீது ஊற்றி தீ வைத்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யாவும் மகள்
ஒமிஷாவும் விலகினர்
ஆனால் சிறுவன் நிகில் மீது தீப்பற்றி யது. இதனால் அவன் வலி யால் அலறி துடித்தான். அவன் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து ஈரோடு அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத் தான நிலையில் நிகிலுக்கு டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.
இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமலைசெல்வனை கைது செய்தனர்.