குளச்சல், நவ-11
ராஜாக்கமங்கலம் அருகே தெக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தவசி (22) இவருக்கு மலர் என்ற மனைவி, மூன்று வயதில் நிரஞ்சனா மற்றும் தர்ஷினி என இரண்டு மகள்கள் உள்ளனர். தவசி தங்கை விஜயலட்சுமி கோவையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்கு மலர், இரண்டாவது மகள் தர்ஷினி மற்றும் குடும்பத்தார் நேற்று கோவைக்கு புறப்பட்டு சென்றனர்.
எனது வீட்டில் தவசி மற்றும் குழந்தை நிரஞ்சனா மட்டும் இருந்துள்ளனர். மாலையில் தவசி வீட்டில் உள்ள கழிவறை சென்று திரும்பி வந்து பார்த்தபோது மகளை காணவில்லை. வீட்டின் பல இடங்களில் தேடினார். அப்போது குளியறையில் உள்ள ஒரு வாளியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியவாறு நிரஞ்சனா காணப்பட்டார்.
தவசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்று, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.