கிருஷ்ணகிரி, செப். 4 –
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கலையரங்கில், “மாபெரும் தமிழ் கனவு” தமிழ்மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார். உடன் சொற்பொழிவாளர் கரு. ஆறுமுகத்தமிழன், மண்டல இணை இயக்குநர் (கல்லுாரி) முனைவர் ராமலட்சுமி, அரசு மகளிர் கலை கல்லுாரி முதல்வர் சௌ. கீதா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் மரு. சத்யபாமா மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளனர்.



