மயிலாடு துறை, ஆக. 19 –
மயிலாடு துறையை அடுத்துள்ளது மன்னம் பந்தல். இங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமை மயிலாடுதுறை வருவாய் கோட்டாச்சியர் உமா மகேஸ்வரி துவக்கி வைத்தார். முகாமில் கலைஞர் காப்பீடு திட்டம், மகளிர் உரிமை தொகை. முதியோர் தொகை, ஆதார் கார்டு பெயர் மாற்றம், வேளாண்மை இடு பொருள் பெறுதல் போன்ற திட்டங்களை மக்களுக்கு எளிதாக கிடைக்க முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 500க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில் ஊராட்சி செயலர் இரஜினி நன்றியுரை ஆற்றினார்.



