கோவில்பட்டி, ஆக. 11 –
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி கோவில்பட்டி யூனியன் மெய்தலைவன்பட்டி கிராமத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் திமுக சார்பில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இறுதிப் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார்.
இப்போட்டியில் முதல் பரிசு MTP நேதாஜி சுபாஷ் அணியினரும், இரண்டாவது பரிசு அய்யனார் ஊத்து அணியினரும், மூன்றாவது பரிசு சி ஆர் பி எஃப் சுப்பிரமணியன் நினைவு சவாலாபெரி அணியினரும், நான்காவது பரிசு கோபாலபுரம் அணியினரும் தட்டி சென்றனர். இந்நிகழ்வில் திமுக கோவில்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெய கண்ணன் முன்னிலை வகித்தார்.
ஆசூர் பஞ்சாயத்து துணை தலைவர் மாரிமுத்து, விருதுநகர் சின்ன முருகன், கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மெய்தலைவன் பட்டி அய்யாதுரை பாண்டியன், திமுக கிளை கழக செயலாளர் வேல்முருகன் மற்றும் ஊர் இளைஞர்கள், பெண்கள் சிறப்பான முறையில் வரவேற்றனர்.



