நாகர்கோவில், ஆக 4 –
தக்கலை அருகே வேதாகம வகுப்புக்கு வந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தக்கலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிறிஸ்தவ சபை ஒன்றில் போத கராக மூலச்சல் பகுதியை சேர்ந்த வர்கீஸ் (55). என்பவர் உள்ளார். இவர் வேதாகம வகுப்பிற்கு வந்த 17 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுவன் தக்கலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். மேற்படி வழக்கில் வர்கீஸ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.