தென்காசி, ஜூலை 25 –
தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் பெற்ற தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவிலை சேர்ந்த அருண் சந்தோஷ்க்கு சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்தரமோகன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமை உரையாற்றினார்.
அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு ஆகியோர் முன்னிலை உரை ஆற்றினார்கள். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலைச் சேர்ந்த மனோகர் என்பவரது புதல்வன் அருண் சந்தோஷ்க்கு டேக்வாண்டோ போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்றதை பாராட்டி அவருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி நேரில் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள்,
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.