நாகர்கோவில், ஜூலை 15 –
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடன் பழகிவிட்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி தென்காசி மாவட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷை கைது செய்து விசாரணை செய்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிசுந்தரையா மகேஷ் குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.



