திருப்பூர் ஜூன்: 2
தெற்கு மாவட்ட நிர்வாகிகள்..தமிழக முதலமைச்சர் மு க .ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து மக்களுக்கு பலவிதமான நல்ல திட்டங்களை அறிவித்து அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், கடன் கல்விக் கடன், விவசாய கடன்கள், தொழில் கடன், மக்களுடன் முதல்வர் திட்டம், இலவச சைக்கிள், கலைஞர் காப்பீட்டு திட்டம் ,போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து பகுதி வாரியாக நலத்திட்ட முகாம்களை நடத்தி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதை குறிப்பிட்ட நாட்கள் பரிசினை செய்து நிறைவேற்றி வருகிறார்.
அந்த வகையில் திருப்பூர் தெற்கு மாவட்டம் உட்பட்ட வார்டுகளில் முதலமைச்சரின் உத்தரவின்படி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு பெ. சாமிநாதன் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் நான்காம் மண்டலம் இ.ல. பத்மநாதன் தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்



