தேனி, ஜூலை 1 –
விளையாட்டுத்துறையில் சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்பொது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் ரூ.6,000/- வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்ச தகுதி விண்ணப்பதாரர்கள் சர்வதேச/ தேசிய அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும் (அல்லது) சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.
தகுதியான விளையாட்டுப் போட்டிகள் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளாக்கலால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம்/ இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 2025 – ஆம் வருடம் ஏப்ரல் மாதம் (30.04.2025) அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூபாய் 6000/- ஆக இருத்தல் வேண்டும் (இதற்கான 2025 – ஆம் ஆண்டு பெறப்பட்ட வருமானச் சான்றினை சமர்ப்பித்திட வேண்டும்). ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்/ மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran/ Masters sports meet) வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற இயலாது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 31.07.2025 மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் தெரிவித்துள்ளார்.