திருப்பத்தூர், ஜூன் 24 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிற நிலையில் மதிய ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர், வழக்கறிஞர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர், நாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார். ஒன்றிய துணை செயலாளர்கள் வழக்கறிஞர் மாது, தீபா, ஒன்றிய பொருளாளர் சர்க்கரை, மாவட்ட பிரதிநிதிகள் சக்கரவர்த்தி, ஆசிரியர் ஆர்வில், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வேலூர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகையின்போது வரவேற்பு அளிப்பது, மக்களிடையே நலத்திட்டங்களைக் கொண்டு சேர்ப்பது, அந்தந்த கிளை மற்றும் ஊராட்சிகளில் வீடு தோறும் சென்று கட்சியின் கொள்கைகளை எடுத்துக் கூறி அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மேலும் தலைமை அறிவிக்கும் அனைத்து செயல்பாடுகளையும் மக்களின் பார்வைக்குக் கொண்டு சென்று அவர்கள் இருக்கும் பகுதிகளில் என்னென்ன அடிப்படை தேவைகள் உள்ளது என்பதை பூர்த்தி செய்ய செயலாற்ற வேண்டும் எனக் கூறினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், மாவட்ட பொருளாளர் ஜோதி ராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர் அரசு, ரகுநாத், ஒன்றிய குழுப் பெருந்தலைவர் திருமதி திருமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் முரளிதரன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி சுகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன், துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், யுவராஜ், ஐயப்பன், கோபிநாத், சிவசங்கர், மாதேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் மேனகா விவேகானந்தன், லட்சுமி கார்த்திகேயன், குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி சக்திவேல், தமிழ் குடிமகன், சோனியா சக்திவேல், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் செந்தில், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் சரவணன், கிளை செயலாளர்கள் ஆதியூர் செந்தில், ராவத்தம்பட்டி தசரதன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பாக முகவர்கள், ஊராட்சி கிளைக் கழக திமுக நிர்வாகிகள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இக்கூட்டத்தில் தகவல் தொழில் நுட்ப அணி சோனியா சக்திவேல் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன் நன்றியுரை வழங்கினார்.