மதுரை, ஜூன் 21 –
மதுரை விமான நிலையத்தில் வருடாந்திர அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம். விமான நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்
மதுரை விமான நிலைய பொறுப்பு இயக்குனர் இளம்பரிதி தலைமையில் மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு உதவி கமாண்டன்ட் கமல் குமார் முன்னிலையில்
நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 26.06.2025 அன்று மதுரை விமான நிலைய ஓடு பாதையில் விமான விபத்து மற்றும் தீவிரவாத பாதுகாப்பு குறித்து அனைத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெறும்.
பாதுகாப்பு ஒத்திகையின் மூலம் தீவிரவாத தாக்குதல், விமான விபத்து போன்ற அவசர காலங்களில் ஏற்படும் பேரிடர்களில் விமான பயணிகளை மீட்கும் பணிகளின் ஒத்திகை பயிற்சி அலுவலர்களுக்கு உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கூட்டத்தின் போது பல்வேறு விமான நிறுவன அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மேலாளர் ஹரிக்குமார், உதவி மேலாளர் சிவன், காவல் துணை ஆணையர்
உட்பட சுகாதார துறை அலுவலர்கள் மற்றும் அவசரகால பேரிடர் மீட்பு பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.