திங்கள்சந்தை, ஜூன் 19 –
சுங்கான்கடை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (48). நாகர்கோவில் மாநகராட்சியில் வாட்டர் சப்ளை பிரிவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கீதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். மகன் பி.எஸ்சி., படித்து வருகிறார். ஜாண்சன் கடந்த 6 ஆம் தேதி காலை வேலைக்குச் செல்வதற்காக சுங்கான்கடையில் இருந்து களியங்காடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு காபி பார் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜாண்சன் ரத்தக் காயங்களுடன் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜாண்சன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தைத் தேடி வருகின்றனர்.