இளையான்குடி, ஜுன் 13 –
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாத்தனூர் பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான பேருந்து சேவையை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் புதிய வழித்தடப் பேருந்தானது இராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டு ஆர்.எஸ்.மங்கலம், சாத்தனூர், பஞ்சனூர், இளையான்குடி, சிவகங்கை வழியாக மதுரை சென்றடைகிறது. இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், இளையான்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு.செல்வராசன் , திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி , இராமநாதபுரம் நகர் பிரிவு கிளை மேலாளர் இரத்தினம், ராமநாதன், நடத்துநர் பிரவீன், ஓட்டுநர் துரைப்பாண்டி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.