வேலூர்=05
வேலூர் மாவட்டம், ஜாப்ராபேட்டை கிராமத்தில் நடைபெற்ற கெங்கை அம்மன் திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் சிரசு ஊர்வலமு,ம் கண் திறப்பு நிகழ்ச்சியும், சிரசு ஏற்றும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவில் திமுக ஓட்டுநர் அணி அமைப்பு சாரா மாவட்ட துணை அமைப்பாளர் எஸ். காந்தி , ஆர். முரளி, ரேணு, செல்வராஜ், ரவி ஜெயராஜ் பிரகாஷ் ஆகியோர் திருவிழாவினை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.