தமிழக பள்ளி மாணவர்களுக்கு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி கள் திறந்தவுடன் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் பாட புத்தகங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர்கள் கீதா வேணி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் குருசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஆசிரியை பொன்மேகலா வரவேற்றார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கினார். தொடர்ந்து ராஜா எம்எல்ஏ பேசுகையில்,
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பொருளாதாரத்தில் பின் தங்கிய பெற்றோர்கள் இல்லாத மாணவ மாணவிகளுக்கு அரசு ரூபாய் 4000 உதவித்தொகை வழங்கியது ஏராளமான மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிக்குச் செல்லும் பழைய மாணவ மாணவியர்கள் பயன்பாட்டிற்கு. சங்கரன்கோவிலில் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவு சார்மையம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கல்விதுறைக்கு ரூபாய் 46 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி மாணவ, மாணவிகள் கல்வி கற்க பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளார். மேலும் மாணவ மாணவிகள் பேருந்துகளில் சென்று வர இலவச பஸ் பாஸ், மதியம் சத்தான சத்துணவு, விலையில்லா மிதிவண்டி தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை வழங்கியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின். மாணவ மாணவிகளின் கல்வி தொடர்பான அனைத்து தேவைகளையும் சட்டமன்ற உறுப்பினராக நிறைவேற்றுவேன் எனவும், தமிழ்நாடு அரசின் கல்விக்கான திட்டங்களை பயன்படுத்தி மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என பேசினார். முன்னதாக சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தெய்வப்பிரியா தலைமையில் மாணவர்களுக்கு தமிழக அரசின் பாட புத்தகங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் , ஆசிரியர்கள் சங்கர் ராம், திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா மாவட்ட துணை செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி நகர அவை தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார் சுப்புத்தாய் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், பள்ளி மேலாண்மை குழு செல்வின், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஶ்ரீ தேவி நன்றி கூறினார்.
அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு பாட புத்தகங்களை வழங்கி ராஜா எம்எல்ஏ

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics