“ஸ்ரீமன் நாராயணீயம்” என்பது 100 தசகங்கள் 1036 ஸ்லோகங்களைக் கொண்ட இந்து கடவுளான கிருஷ்ணரை மையப்படுத்தி தொகுக்கப்பட்ட இந்து புராண நூலாகும். இதைப் படிப்பதற்கு 5 மணி நேரமும் கருத்தை விளக்குவதற்கு 45 மணி நேரமும் ஆகும்.
இந்த நிலையில் ஸ்ரீ கிருஷ்ணா சத்சங்கம் சார்பில் ஸ்ரீமன் நாராயணீயத்தை முழுமையாக படித்து மனப்பாடம் செய்து வினாடி வினா போட்டி நடத்தி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
அதன் ஒரு பகுதியாக சென்னை பல்லாவரத்தில் ஸ்ரீ கிருஷ்ணா சத்சங் தலைவர் முனைவர் பிரியா ஐயப்பன் தலைமையில் நடைப்பெற்றது.
உலக அளவில் நாராயணியத்தில், உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இத இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா, பிலிப்பைன்ஸ், மலேசியா, நெதர்லாந்து, மஸ்கட், துபாய், அபுதாபி, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் இருந்து
ஏராளமானோர் வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டனர்.
ஒரு மணி நேரத்தில் உலகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை
உலக சாதனையை அங்கீகரிக்கும் விதமாக “கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்”சார்பில் பதக்கம் சாதனை படைத்ததற்கான சான்றிதழையும் சத்சங் தலைவர் பிரியா ஐயப்பன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த தனித்துவமான வினாடி வினா, உலகம் முழுவதிலுமிருந்து ஆன்மீகத் தேடுபவர்களை ஒரு அதிவேக அறிவு சவாலில் ஒன்றிணைத்து, உலகளாவிய ஆன்மீக ஈடுபாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க L அமைந்துள்ளது.