தருமபுரியில் ஒருங்கிணைந்த திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் கலந்துகொண்டு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்ட உள்ள ஐந்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் அதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் .கழக ஆக்கப் பணிகள் குறித்தும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். கழகத்தின்4 ஆண்டு சாதனைகள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.நிர்வாகிகளுக்கு மற்றும் பல ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம் பி ,மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், நகர கழக செயலாளர் நாட்டான் மாது,ஒன்றிய செயலாளர்கள், மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.



