ஈரோடு மே 25
ஈரோடு ஈ வி என் ரோட்டில் வாசன் கண் மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனை இப்போது புத்தம் புதிய பொலிவுடன் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வி சி சந்திர குமார் எம் எல் ஏ, மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், கொங்கு கல்வி நிலைய செயலாளர் சிவானந்தன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் நடராஜன், சௌந்தரராஜன், முருகேசன், மணி, கந்தசாமி, கதிர்வேல், சிவலிங்கம், பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அமைச்சர் முத்துசாமி மற்றும் வாசன் கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் கமல் பாபு ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர் . மேலும் வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவை பற்றி டாக்டர் கமல் பாபு வாசன் மருத்துவமனையின் சிறப்பு அம்சங்கள் பற்றி இயக்குனர் சுந்தர முருகேசன் ஆகியோர் விளக்கி பேசினர் வாசன் கண் மருத்துவமனையின் டாக்டர்கள் பானு பிரதாப் சிங், சிந்தனை, கீர்த்தனா, சரண்யா, ப்ரீத்தி, மதுபாலா மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை யொட்டி 25 மூத்த குடிமக்களுக்கு தமிழ்நாடு அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.