சென்னை மே 25
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட
மண்டலம் 11- ல் உள்ள வார்டு எண் 144 பகுதியில் அதிகளவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. இந்த பகுதியில் அதிக அளவு வாகனங்கள் அதிவிரைவாக செல்வதால் விபத்துகள் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்
மேற்காணும் மண்டலத்தில் உதவி பொறியாளராக பணி புரிபவரிடம் சமூக ஆர்வலர்கள் விபத்து நேரும் இடங்களில் வேகத்தடை அமைக்க சொன்னதாகவும் அதற்கு மேற்படி உதவி பொறியாளர் பணம் கொடுத்தால் வேகத்தடை அமைத்து தருவதாக சொல்கிறார் என்று கூறுகின்றார். எனவே மக்கள் பணி செய்வதற்கு கையூட்டு கேட்கும் அரசு அலுவலர் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேற்படி பகுதியில் துறை சார்ந்த அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு அடிக்கடி விபத்து நேரும் இடங்களில் வேகத்தடை அமைத்து விபத்தில்லா மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கூறுகின்றனர்.


