தஞ்சாவூர் மே 23.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல்களுக் கான மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் கூறி இருப்ப தாவது:
வாக்காளர் பட்டியலில் 18 வயது க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளி கள் அனைவரையும் விடுபடாமல் சேர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். வாக்காளர் பட்டியல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடி மையங்கள் குறித்து குறைகள் ஏதும் இருப்பின் 3 மாதங் களுக்கு ஒரு முறை கூட்டப்படும் கூட்டத்திலையோ அல்லது கோட்ட மற்றும் மாவட்ட அளவில் நடத்தப் படும் மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலோ தங்களது கோரிக்கைகளை நேரில் அல்லது பிரதிநிதிகள் மூலமாக வோ மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வரலாம் மேலும் வாக்குச்சாவடி மையங்க ளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்



