மானாமதுரை:மே:19
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்க்கிளை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் நான்காமாண்டு மாபெரும் இரத்ததானம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மானாமதுரை நகர் பொதுமக்கள் மத்தியில் சிறப்பாக மக்கள் பணியாற்றிவரும் மானாமதுரை தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் தங்களது அமைப்பின் மூலம் பல்வேறு வகையிலான உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மானாமதுரை கன்னார் தெரு பள்ளிவாசலில் மாபெரும் இரத்ததானம் நிகழ்ச்சி நடைபெற்றது. குருதிக் கொடையளித்தோருக்கு சான்றிதழ்கள், பல்வேறு வகையான மரக்கன்றுகள் பழங்கள், தண்ணீர் பாட்டில், பழச்சாறு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் சிவகங்கை மாவட்ட துணைத்தலைவர் முகமது ஹனீஃபா , மனாமதுரை 25 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகஜோதி மணிகண்டன், ஜமா அத் நிர்வாகிகள் அப்துல் நஸீர், முகமது ஹனீஃபா, அப்துல் சமது , சமசுதீன் , ஆஷிக், சல்மான், ஷேக், மற்றும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள்
சிறப்பாக செய்திருந்தனர்.