குமரி மாவட்டத்தில் 3 பேர் மரணம்
வெயில் தாக்கம் அல்ல-
சுகாதாரத்துறை விளக்கம்
நாகர்கோவில் மே 18
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த மூன்று உயிரிழப்புகள் குறித்து நேற்று மாவட்ட சுகாதாரத்துறை விளக்கம் அளித்தது.
கோடைவெப்பம் காரணமல்ல எனத் தெரிவித்தது. மூவரும் நீண்ட நாள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒருவருக்கு நுரையீரல் நீர்கோர்வு, இன்னொருவருக்கு சிறுநீரக செயலிழப்பு, மூன்றாவருக்கு நிமோதோராக்ஸ் இருந்தது.
இதனால் கோடை வெப்பம் காரணம் என்பது தவறான தகவல் எனவும், மக்கள் அச்சம் அடைய தேவையில்லை எனவும் மாவட்ட சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது.



