திருப்பத்தூர்:மே:17,
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடையினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு செவ்வாத்தூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மாதம்மாள் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குணசேகரன், மத்திய ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் கிளை செயலாளர் பாலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலரும் இரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று நியாய விலைக் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வரும் சூழல் இருந்தது.
இந்நிலையில் அதே பகுதியினை சேர்ந்த சமூக ஆர்வலர் மூர்த்தி தொடர்ந்து அரசின் பார்வைக்கு கொண்டு சென்று மனுக்களை அளித்த நிலையில் தின தமிழ் நாளிதழ் செய்தியாக்கியது. அதே பகுதியில் உள்ள கந்திலி மத்திய ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் பாலு சட்டமன்ற உறுப்பினரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பகுதி நேர நியாய விலைக் கடையினை வழங்க உத்தரவிடப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி திருமுருகன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் மோகன்ராஜ், முருகேசன், செவ்வாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனா குமரேசன், மாவட்ட பிரதிநிதி ஆசிரியர் ஆர்வில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ், துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், யுவராஜ் , விளையாட்டு மேம்பாட்டு அணி சுகுமார், பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கூட்டுறவுத் துறை தர்மேந்திரன் நன்றியுரை வழங்கினார்.



