மார்த்தாண்டம், மே – 15
அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடு பகுதியில் வசிப்பவர் வில்சன் (54) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் மாலைக்கோடு பகுதியில் வசித்து வருகின்றனர். வில்சன் தனியாக வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தானிமூட்டில் உள்ள தனது வீட்டில் வந்து படுத்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் அருமனை போலீஸாருக்கு புகார் அளித்து, குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது வில்சன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி வினிதா என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.