தென்தாமரைகுளம்: மே.14
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவினை முன்னிட்டு சாமிதோப்பில் மாநில அளவிலான மின் னொளி வாலிபால் போட்டி நாளை 15ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து சாமி.தோப்பு அய்யா வைகுண்டர்.வாலிபால் கிளப் தலைவர் குரு..பால.ஜனாதிபதி, மற்றும் நிர்வாகிகள் பார்த்தசாரதி, சத்தியசேகர், வாலிபால் பயிற்சியாளர்கள் பழத்துரை,தாமரை முருகன், ராஜலிங்கம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவை முன்னிட்டு அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் மற்றும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை இணைந்து நடத்தும் 4-வது மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி வருகிற 15,16 ,17 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.
சாமிதோப்பு தலைமைபதி முன்பு நடைபெறும் இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வருமான வரித்துறை, இந்தியன் வங்கி ,சுங்க த்துறை,எஸ்.ஆர்.எம் கல்லூரி அணிகளும் ,பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம் கல்லூரி,தென்னக ரயில்வே ,சிவந்திஆதித்தனார் கல்லூரி,மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் ஆகிய அணிகள் இடம் பெறுகின்றன.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகையாக ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் பரிசு கோப்பை,யும்,இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பை யும்,மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பை,யும்.நான்காம் பரிசு ரூ.25 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பையும் வழங்கப்படுகிறது.
மேலும் சிறந்த ஆட்டக்காரர் பரிசு ஒவ்வொரு ‘போட்டியிலும் ஒரு வருக்கு வழங்கப்படும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.