காஞ்சிபுரம் மே 11
காஞ்சிபுரம் மாவட்டம் மாணவரணி நிர்வாகி மொய்தீன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே.தென்னரசு 50 க்கும் மேற்பட்ட அக்கட்சி நிர்வாகிகளுடன் பங்கேற்று உணவு வழங்கி சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் தவெக சார்பில் ஆயிரத்தி ஐநூறு நாட்களாக ஏழை எளிய பொது மக்களுக்கு விலையில்லா விருந்து மாவட்ட செயலாளர்
எஸ்.பி. கே. தென்னரசு தலைமையில் அக்கட்சியினர் வழங்கி வருகின்றனர்.
இந்த நிகழ்வு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் என அனைத்து தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.