மயிலாடு துறை மாவட்டம் திருத்துருத்தி (எ) குத்தாலத்தில் மிக பழமையான செங்கமல தாயார் உடனாகிய ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு, புனித நீர் கடங்களை யாகசாலையில் வைத்து, பட்டாச்சாரியார்கள் யாக குண்டம் அமைத்து வேத மந்திரங்கள் ஓதி நான்கு கால பூஜை நடைபெற்றது. நான்காம் கால பூஜை முடிவில் பூர்னா குதி செய்து தீபாரதனை நடைபெற்றது. பின் புனித நீர் கடங்களை பட்டாச்சாரியார் தலையில் சுமந்து வேத மந்திரங்கள் முழங்க, மேல தாளங்கள் மல்லாரி வாசிக்க கடம்புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுர கலசங்களை சென்றடைந்தது. பின் பட்டாச்சாரியார் நான்கு வேதங்களை ஓதி, கடங்களில் உள்ள புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிசேகம் மிக சீரும் சிறப்பு மாக நடைபெற்றது. அது சமயம் கும்பாபிசேகத்தை காண வந்த ஆயிரக்கனக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனக் கூறி கும்பாபிசேகத்தை கண்டு பெருமாளின் அருளை பெற்றனர்
குத்தாலத்தில் மிக பழமையான செங்கமல தாயார் உடனாசிய ஆதிகேசவ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்.



