வேலூர் மாவட்டம் , வேலூர் மாநகராட்சி மற்றும் சிஎம்சி மருத்துவமனையும் இணைந்து வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர்
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம்,இரத்தப் பரிசோதனை, நீரழிவு பரிசோதனை ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர்
உடன் கவுன்சிலர்கள் கே.ஜி.சீனிவாசன்,டீட்டா சரவணன், சித்ரா மகேந்திரன், 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் சிஎம்சி மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹிட்லர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்



