விருவீடு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மல்லணம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏபரல் 23,24 இரண்டு நாட்கள் தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின் துவக்க விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சீனிவாசன், மருத்துவ அலுவலர்கள் மோனிகா மற்றும் மஞ்சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய தர நிர்ணய சான்றிதழ் மதிப்பீட்டாளர்கள் ரவிக்குமார் மந்திரி மற்றும் மரியம்மா ஆகியோர் மதிப்பீடு செய்து வருகின்றனர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிப்பீட்டார்கள் இருவரும் சிறுகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.



