நீலகிரி, ஏப்ரல் 23
கோத்தகிரியில் இருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் பகுதியில் புதிதாக பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து மகாசக்தி விநாயகர் கோவிலில் இருந்து மங்கள வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க புண்ணிய தீர்த்தம், முளைப்பாரி, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சீதனம் எடுத்துவருதல், நிகழ்ச்சி நடைபெற்றது மாலை 6 மணிக்கு ஸ்ரீ விஷ்வசேனர் பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி மற்றும் யாகசாலை பூஜைகள், வேதபாராயணம், மூலிகையினால் யாகம், புராணகுதி, தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது இரவு 9 மணிக்கு எந்திர ஸ்தாபனம் மருந்து சாத்துதல் நடைபெற்றது.
இந்த நிலையில் முன்னதாக காலை 6 மணிக்கு கோவிலில் ஸ்ரீ விஷ்வசேனர் பூஜை, மகா சங்கல்பம், யாகசாலை பூஜைகள், வேதபாராயணம், நாடி சந்தானம் உயிருட்டுதல், மூலிகையினால் யாக பூஜை, தீபாராதனை, கடம்புறப்பாடு நடந்தது. இதையடுத்து மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராசாரியசாமிகள் தலைமையில் திருவேங்கிட ஜோதி பட்டாச்சாரியார், சுதர்சன பட்டாச்சாரியார், ஆகியோர் பங்கேற்று கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர். அதன் படி கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன் அப்பகுதியில் வானில் கருடன் பறந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது
இதில் முன்னால் குன்னூர் தொகுதி எம்.எல்ஏ சாந்திராமு, நெல்லை கண்ணன், இட்டக்கல் போஜராஜன், அமுதம் பாபு, ஜெகதீஷ், அணில் குமார், ரமேஷ்குமார், உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது