கோவை ஏப்:19
கோவை கொடிசியா வளாகத்தில் பில்டு இன்டெக் 2025 கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி வருகிற ஏப்.18ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து கொடிசியா தலைவர் கார்த்திகேயன், செயலாளர் யுவராஜ் , பில்டு இன்டெக் 2025 தலைவர் ஞான வள்ளல், துணை தலைவர் பாபு ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது அவர் கூறியதாவது,
கோவை கொடிசியா வளாகத்தில் 14வது பதிப்பாக ஃபீல்டு இண்டெக் 2025 என்ற பெயரில் கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி வருகிற ஏப்.18ம் தேதி தொடங்குகிறது.
இந்த கண்காட்சியில்
டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா,கர்நாடகா,கேரளா, மகாராஷ்டிரா, உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்கள் பங்கேற்கின்றன. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறார், வருகிற 21ம் தேதி முடிய நடைபெறும் இந்த கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. இந்தியா முழுவதும் இருந்து 40000 பேர் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கண்காட்சியின் மொத்த பரப்பளவு ஒரு லட்சம் சதுர அடி ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.