வாடிப்பட்டி, ஏப்:16
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,
வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக கிளைக் கழக பூத்கமிட்டி கூட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. இதற்கு, ஒன்றிய கழகச் செயலாளர் எம்.காளிதாஸ் தலைமை தாங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம்,
எஸ்.எஸ். சரவணன், மாநில பேரவை இணைச் செயலாளர்கள் ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல் மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர்
முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச்
செயலாளர் மணிமாறன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து
மாவட்ட கழகச் செயலாளர். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்.
பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
அ.தி.முக வரலாற்றில் 32 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்து மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்தது. குறிப்பாக சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க இருந்தது. இன்றைக்கு வாக்கு வங்கிக்காக திமுக பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் அதெல்லாம் சிறுபான்மையின மக்கள் நம்பத் தயாராக இல்லை.
இன்றைக்கு தமிழகத்தில் ஆளுங்கட்சி பதட்டமாக உள்ளது, அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளரி கொண்டு பேசி வருக்கிறார்கள். முதலில் 200 தொகுதி வெல்வோம் என்று ஒரு அமைச்சரும், 230 தொகுதியை வெல்லுவோம் என்று இன்னொரு அமைச்சரும், 543 தொகுதிகளில் வெல்லுவோம் என்று மற்றொரு அமைச்சரும் கூறுகிறார்.
ஆனால், தமிழகத்தில் 234 தொகுதி தான் உள்ளது. இன்னொரு அமைச்சர் 34 தொகுதியை வெல்வோம் என்று கூறுகிறார், இதற்கெல்லாம் மேலாக சட்டமன்றத்தில் ஸ்டாலின் ஆளும்கட்சி அதிமுக என்று ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்து விட்டார். எடப்பாடியார் முதலமைச்சராக வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இன்றைக்கு அதிமுக, பிஜேபி கூட்டணி ஏற்பட்ட பிறகு திமுக கூட்டணியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இன்றைக்கு காங்கிரஸ் ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்றும்.அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று ஆப்பு வைத்து போஸ்டர்கள் ஒட்டி விட்டார்கள், மானம் ரோஷம் இருந்திருந்தால் உடனடியாக ஓரம் கட்டி இருப்பவர்கள் அல்லது அப்படி போஸ்டர் ஓட்டியவர்களை கட்சியை விட்டு நீக்கம் செய்திருப்பார்கள், இன்றைக்கு
காங்கிரஸ் கட்சி பிள்ளையும்
கிள்ளிவிட்டு,தொட்டிலையும் ஆட்டுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மனித புனிதர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட புனித இயக்கம், இந்த இயக்கத்தை எந்த கொம்பானாலும் ஆட்டவோ ,
அசைக்கவோ முடியாது. இன்றைக்கு இந்த இயக்கத்தின் புரட்சி அவதாரமாக எடப்பாடியார் உள்ளார்.
வலிமையான கூட்டணியை அமைப்பேன் என்று எடப்பாடியார் சொன்ன போது வாய்க்கு வந்தடி விமர்சனங்களை செய்தார்கள், இன்றைக்கு அவர்களுக்கு எல்லாம் சவுக்கடி கொடுக்கும் வகையில் எடப்பாடியார் கூட்டணியை அமைத்து விட்டார். இன்றைக்கு மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது,போதை நடமாட்டம் அதிகரித்துள்ளது இது எல்லாம் கைகட்டி திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது .இதற்கெல்லாம் ஒரே தீர்வு மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான்.அந்த நாள் வெகுதொலைவில் இல்லை இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் முன்னாள் ஊராட்சி மன்றத்
தலைவர் ஆலயமணி அனைவருக்கும்
நன்றி கூறினார்.