திருவாரூர்
ஏப்ரல் 15
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் நாள் சமத்துவ நாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அதனைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், விளமல் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் 1199 பயனாளிகளுக்கு ரூ.14 கோடியே 39 லட்சத்து 13 ஆயிரத்து 51 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் வழங்கினார்கள்.
சமத்துவ நாள் விழாவில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 15 நபர்களுக்கு மொத்தம் ரூ. 1 லட்சத்து 350 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரமும், இறப்பு நிவாரணம் 1 பயனாளிக்கு ரூ.30 ஆயிரமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் மொத்தம் ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 100 மதிப்பீட்டிலும், 4 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக மொத்தம் ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 600 மதிப்பிலான தங்க நாணயமும், வருவாய்த்துறையின் சார்பில் 411 பயனாளிகளுக்கு ரூ.74 லட்சத்து 76 ஆயிரத்து 500 மதிப்பிலான இ-பட்டாவும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 130 மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.1 கோடியே 32 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான கடனுதவியும், தாட்கோ சார்பில் முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சமூக பொருளாதார அதிகாரமளித்து வளம் உண்டாக்குதல் தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.13 லட்சத்து 7 ஆயிரத்து 175 மதிப்பிலான கடனுதவியும், பிரதான் மந்திரி அனுசுதித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவியும், 5 நபர்களுக்கு நலவாரிய அட்டையும், நன்னிலம் மகளிர் நில உடைமைத்திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 45 ஆயிரத்து 500 மதிப்பிலான கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் திருமண, கல்வி உதவித்தொகையும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 50 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.97 ஆயிரத்து 835 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.25 ஆயிரத்து 640 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 2 பயனாளிகளுக்கு உழவர் அட்டையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.21 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான வேளாண்மை இயந்திர மயமாக்குதலின் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 10 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 32 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான கடனுதவியும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை (கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள்) சார்பில் 56 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 250 மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், திருமண உதவித்தொகை மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டிலும், 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகையும், 23 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.27 ஆயிரத்து 600 மதிப்பிலான ஓய்வூதியத்தொகையும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் கீழ் 26 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் காப்பீட்டு அட்டையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 250 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.8 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடும், 100 பயனாளிகளுக்கு ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 24 லட்சத்து 37 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 70 பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் என மொத்தம் 1199 பயனாளிகளுக்கு ரூ.14 கோடியே 39 லட்சத்து 13 ஆயிரத்து 51 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் வழங்கினார்கள்.
முன்னதாக, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, திருவாரூர் நகர்மன்றத்தலைவர் புவனப்பிரியா செந்தில், கூத்தாநல்லூர் நகர்மன்றத்தலைவர் .பாத்திமா பஃஷிரா தாஜ், திருத்துறைப்பூண்டி நகர்மன்றத்தலைவர் கவிதா பாண்டியன், திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் அமுதா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா, வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.