மதுரை ஏப்ரல் 10
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அவனியாபுரம் வந்த 10.D அரசு பேருந்து மீண்டும் அவனியாபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆரப்பாளையம் சென்று கொண்டிருந்தது.
அவனியாபுரம் பெரியார் சிலை அருகே சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமலிருக்க டிரைவர் பேருந்தை திருப்பிய போது தரைப்பாலம் ஓரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயத்துடன் வெளியேற்றப்பட்டனர். தரைப்பாலம் ஓரத்தில் இருந்த முல்லை – பெரியார் கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர். போக்குவரத்தை சீர் செய்து வாகனத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாநகர அரசு பேருந்து மோதியதில் முல்லைப் பெரியாறு குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் வீணான தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் உடைந்த குழாயை உடனடியாக சீர் செய்தனர்.